Saturday, September 19, 2009

கந்தசாமியும், ராமசாமியும் இப்போ ஜேம்ஸ் & டேவிட்- எதனால் ?

இது இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கான பதிவு.


எங்க போய் இந்து சமயத்தைப் பற்றி பேசினாலும், வேற்று சமயத்தவர்கள் மற்றும் நாத்திகர்கள் கூறும் குற்றச்சாட்டு சாதி உயர்வு தாழ்வு பேதங்கள் இருப்பதைத் தான் குறையாக கூறுவார்கள். சாதியைப் பற்றி அலசுவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. அது நாத்திகர்கள் மற்றும் திராவிட இயக்கங்களின் வேலை. மற்ற சமயத்தவரை புன்படுத்துவதோ, காயப்படுத்துவதோ இந்தப் பதிவின் நோக்கமல்ல. பல சூழ்ச்சிக்காரர்களால் பிரிக்கப்பட்டு இருக்கும் இந்து சமய மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சியே இந்தப் பதிவின் நோக்கம்.

இதுக்கு இப்போ என்ன அவசியம் வந்துச்சுன்னு நீங்க கேக்கலாம். வெள்ளைக்காரன் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டான் என்பது அனைவருக்கும் தெரியும். இதில் ஒன்று இந்து, முஸ்லிம் என பிரித்து நம் நாட்டை அடைய நினைத்தது. மற்றொன்று, இருக்கிற சாதி வேறுபாடுகளை பெரிதுபடுத்தி, இந்துக்களின் ஒற்றுமையை உடைத்தெறிந்து, நாட்டைத் துண்டு போட திட்டம் தீட்டியது.

ஒரு காலக் கட்டத்தில் பிராமண சமுதாயம் மற்ற சமுதாயங்களின் மீது ஆதிக்கம் செலுத்தின என்பது யாரும் மறுக்க முடியாது உண்மை. அதனுடைய விளைவு தான் மதமாற்றம். இதில் பிராமண சமுதாயத்தை மட்டும் சொல்ல முடியாது, உயர் சாதி என சொல்லி கொள்ளும் பல சாதிகள் தாழ்த்தப்பட்ட மக்களையும், பழங்குடி மக்களையும் தாழ்வாக நினைத்து அவர்களை தனிமைப்படுத்துவதும் இது போன்ற மதமாற்றங்களுக்கு காரணம்.

மனமாற்றத்தின் காரணமாக மதம் மாறுவது என்பது அவரவர் தனிப்பட்ட் உரிமை. அதனைத் தடுப்பது நமது நோக்கமல்ல. பொதுவாக, பெரும்பான்மையாக கிறித்துவத்திற்கு மாறுபவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தான். அதுவும் அந்த சமயத்தின் மீது ஈடுபாடு கொண்டு மதமாறுபவர்கள் அல்ல. ஒரு சமூக அந்தஸ்திற்காக மதம் மாறுபவர்களே அவர்கள். அதுமட்டுமல்லாமல், பணம் கொடுத்து மதம் மாற்றம் செய்வது, மூளைச் சலவை செய்து மதமாற்றம் செய்பவர்கள், இவற்றையே தொழிலாக கொண்டு இயங்கும் Evangelistகள். இவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மேற்கத்திய நாடுகள். தொண்டு என்கின்ற பெயரில் உள்ளே நுழைந்து, அனைவரையும் கிறித்துவராக மாற்றுவதே அவர்களின் குறிக்கோள். இது அனைவருக்கும் தெரியும்.


நிலைமை இப்படி இருக்க, நம் சமயத்தில் இருப்பவரை சாதி சொல்லி பழித்து, உயர்வு தாழ்வு பார்த்து, நாமே நம்முடைய சமயத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறோம். இது ரொம்ப உச்ச கட்ட நிலைமை. நம்முடைய சமயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதே மதவாதம் என்று சொல்லும் அளவுக்கு மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சிகள் நனவாகிக் கொண்டிருக்கிறது. வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடுவோம். தலித், பிராமணன், முதலி, பிள்ளை, தேவர், நாடார், செட்டியார், வன்னியர்,உடையார் என அனைவரும் ஒன்றுபடுவோம். நம் கலாச்சாரத்தைக் காப்பாற்றுவோம்.


இந்தியாவின் கலாச்சாரம் என்பது இந்துக் கலாச்சாரமே. இந்தியாவின் கலாச்சாரம் மட்டுமல்ல, தமிழனின் தொன்று தொட்ட கலாச்சாரமும் இந்துக் கலாச்சாரம் தான். பெரியாருக்கு பிறகு வந்த கலாச்சாரம், திராவிட கழக கலாச்சாரம். தமிழ் கலாச்சாரம் கிடையாது. பெரியார் கூட, தாழ்த்தப்பட்டவங்க எல்லாம் வேறு சமயம் மாறனும்னா, இஸ்லாமுக்கு மாறுங்கள். கிறித்துவத்திற்கு வேண்டாம். ஏனென்றால், கிறித்துவத்திற்கு மாறினாலும், சாதி ஒழியாது, நீங்கள் இந்துவாகவே இருப்பீர்கள் என்று சொன்னார். அதற்கேற்றார் போல, மாதா கோவிலுக்கு கற்பூரம் காட்டுற அளவுக்கு நம்ம ஊர் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி, மதமாற்றம் செய்து வருகிறார்கள். உலகளவில், இந்தியாவின் பெருமையே நம் கலாச்சாரங்கள் தான். அது தொலைந்து போக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது. இதற்கு எல்லோருமே ஒன்றினைந்து தான் செயல்படனும். அதற்கான முதல் படியை நாம் தான் எடுத்து வைக்க வேண்டும்.

ஒவ்வொருவர் செய்யும் தொழிலை வைத்து வகுக்கப்பட்டது தான் சாதி. அதை மனிதன் தன் சுய நலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டு, சமயத்தின் மீது சாயலைப் பூசுகிறான். கல்வியறிவு, மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மூலம் சாதி அழியத் தொடங்கி இருப்பது நம் சமயத்திற்கு நல்லதே ! இனி சாதி வைத்து உயர்வு தாழ்வு பார்ப்பதை விட்டொழிக்க வேண்டும் !

இதில் பெரும்பாலும் நம் சமயத்தை வம்புக்கு இழுப்பவர்கள் திராவிட கழகத்தினர். இந்துக்களைத் தவிர, கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் எல்லாம் அதனுடைய அங்கத்தினர்கள். ஆகையால் தூற்றுவோர் அனைவரும் நாத்திகர்கள் அல்ல, வேற்று சமயத்தினர் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதனுடைய பின்னூட்டங்களில் கூட பெயர் வித்தைகள் காட்டுவர். நம் சமயத்திற்குள்ளேயே சண்டையிட்டுக்கொள்ள வேண்டும் என்பதே சிலரின் எண்ணம். அதற்காக, உணர்ச்சி வசப்பட்டு, நமக்குள்ளேயே சண்டை போட்டு கொள்வது, நாம் ஏமாறுகிறோம் என்றே அர்த்தம். ஆகையால், சூழ்ச்சிகளுக்குள் சிக்காதீர்கள். இது நம் சமயத்தைப் பற்றிய ஒரு Self-Introspection.


பல இடங்களில், பல விதமாக பேசி ஏளனம் செய்து, சமயத்திற்கு எதிராகப் பொய்ப் பிரச்சாரம் செய்யும் கைக்கூலிகளை அவர்கள் வழியிலேயே சென்று தான் பாடம் புகட்ட வேண்டும். வெளிப்படையாக பேசுவதன் மூலம் ஏதாச்சும் நன்மை வராதான்னு ஒரு ஆசை தான். அன்பையும், சிறந்த வாழ்க்கை நெறியையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனித இனத்துக்கு சொல்லி வழிகாட்டிய நம் சமயத்தை நாமே அழிவுக்கு கொண்டு சொல்கின்றோமோ என்ற வேதனை தான். இப்படி பேசுவது ஒரு மதவாதி போல உங்களுக்கு தோன்றினால், காந்தியடிகள், சர்தார் வல்லபாய் படேல், கோபால கிருஷ்ண கோகுலே, பாரதியார், ஜெய்பிரகாஷ் நாராயன் என அனைவரும் மதவாதிகள் தான். தம் சமயத்தைப் பற்றி, தம் மக்களின் நலன்களைப் பற்றிப் பேசுவது மேற்கத்திய சமயங்களுக்கு மதவாதி போல தோன்றினாலும், கவலை இல்லை.


இவற்றை எல்லாம், மத மாற்ற தடை சட்டம் போட்டு தடுத்து நிறுத்துவதைக் காட்டிலும், நம் மனங்கள் மாறி அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்து நடந்தால், இது போன்ற சூழ்ச்சிக் கூட்டங்கள் தானாக ஓடி விடும்!


அப்புறம், டேவிட், ஜேம்ஸ் நம்முடைய பழைய கந்தசாமியாகவும், ராமசாமியாகவும் திரும்பி வருவர் என்பதில் ஐயமில்லை!

Saturday, September 5, 2009

தமிழனின் தீராத சனி -திராவிட இயக்கங்கள்!


அனைவருக்கும் தெரிந்த, பெரும்பாலனவர்கள் ஒப்புக்கொள்ளும் வகையில் இருப்பதைத் தான் தலைப்பாகச் சொல்லி இருக்கிறேன். ஆகையால், இவற்றினுள் பெரிதாக செல்லாமல், இவர்களின் செயல்பாடுகளை மட்டும் லேசாக விமர்சிக்கும் வகையில் இங்கே சில எண்ணங்கள்.

இது கொஞ்சம் டி.ஆர் பாணியில்...

சனிக்கோ எள்ளு,
பெரியார் திராவிடனுக்கோ ஃபுல்லு...
பணத்தைக் கண்டு விடுவதோ ஜொல்லு
இவர்களின் கொள்கை நாடகம் ஒரு லொல்லு
இந்த ஈழப் பிண வியாபாரிகளைப் (திராவிட இயக்கங்கள்) புறம் தள்ளு
தமிழன் விழித்தால் உங்கள் தலையில் விழும் கல்லு
பெரியாரின் திராவிடனே நில்லு...
திராவிடன் கேட்கிறேன் சொல்லு!

இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். அந்தக் கும்பலைப் பெரியாரின் திராவிடனாகவும், நம்மைப் திராவிடனாகவும் சொல்லி இருக்கிறேன். பெரியார் வந்து திராவிடத்தைக் கண்டுபிடிக்க வில்லை. அவருக்கு ஏற்றார் போல திராவிடத்தை மாற்ற முயற்சித்தார், அப்படி மாறியவர்களே பெரியார் திராவிடன். ஏதோ திராவிடனை இவர்கள் தான் லீசுக்கு எடுத்தது போல பேசுவது உண்மைத் தெர்ந்தவர்களுக்கு சிரிப்பைத் தான் வரவழைக்கும் : )

-----------------------------------------------------------------------------------

திராவிட இயக்கமும், சனியும் ஒரு ஒப்பீடு !

இருவருக்கும் கருப்பு தான் பிடித்த நிறம்.

காக்கா - சனிப்பகவானுக்குப் பிடித்த வாகனம் .
காக்கா பிடிப்பதே திராவிட அரசியலின் தாரக மந்திரம்.
சனி நம் வீட்டிற்கு வந்தால் தனி மனிதனுக்கு கஷ்டம்
திராவிட இயக்கம் இங்கே வந்ததால், தமிழ்நாட்டிற்கே கஷ்டம்!
2 1/2 வருடத்திற்கு ஒரு முறை வீடு மாறுபவர் சனி
காசு கொடுத்தால், எப்பொழுதானாலும் கொள்கை மாறுபவர்கள் திராவிட இயக்கங்கள்!

காரியம் கைகூட, சனி பகவானுக்கு வைப்பது எள்ளு
தமிழனை ஏமாற்ற திராவிட இயக்கங்களுக்கு கொடுப்பது, மந்திரி பதவியும், ஃபுள்ளும்.

ஜென்ம சனியே 7 1/2 வருடம்
இந்த சனி எத்தனை வருடம்?

-----------------------------------------------------------------------------------

ஈழத்துப் பிணங்களின் நெருப்பில்,
பதவிக் குளிர்க்காயும்,
பெரியார் திராவிடர்கள்..!

இது தெரியாமல்
கொள்கை என நினைத்து
ஜால்ரா அடிக்கும்
திராவிடத் தொண்டர்கள்..!

திராவிடனே யார்
என்று தெரியாத
அப்பாவி பொதுஜனம்..!
-----------------------------------------------------------------------------------

என் கட்சி
என் குடும்பம்
என் சொத்து
என் கொள்ளை
இதுவே எங்களின் கொள்கை
எதிர்த்துப் பேசினால்
பார்ப்பனியம் என்பேன்
மூடநம்பிக்கை என்பேன்
தமிழ் விரோதி என்பேன்
ஆரிய மாயை என்பேன் திராவிடத்
துரோகி என்பேன்
அடங்கிப் போனால்
உன்னைப் பெரியார்த் திராவிடன் என்று சொல்லி
வார்டு கவுன்சிலர் ஆக்குவேன்...!

- தமிழினத் தலைவரும்,
தமிழர்த் தலைவரும்..
-----------------------------------------------------------------------------------


ஓட்டு, பின்னூட்டம் இடவில்லை என்றாலும் பரவாயில்லை,தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதியை உலகிற்கு எடுத்துரைத்த சேனல் 4 தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவியுங்கள்
news@channel4.com

Friday, August 21, 2009

தமிழ் ஒரு காட்டுமிராண்டித்தனமான மொழி -பெரியார்


தமிழ் ஒரு காட்டுமிராண்டித்தனமான மொழி
- தமிழைப் பற்றி பெரியார்


பணமுதலைகளின் க்ளப் நீதிக் கட்சி
அதில் சேர்ந்த பெரிய பணக்கார முதலை தான் பெரியார் !

கன்னடத்துப் பெரியார், தமிழ்த் திராவிடனாம்
தமிழ் இந்து, திராவிடனே இல்லையாம் !

மூக்கு சலியா?
மூக்கை வெட்டு
கள்ளுக்கடைகளா?
மரத்தையே வெட்டு...
( -ஈரோட்டில் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்திய பெரியாரும் ஒரு வகையில் காடுவெட்டி குரு தான்)

பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர் - இது பெரியார்
வன்னியர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் - இது நம்ம ராமதாஸ்

எடைக்கு எடை நாணயம் கொடு
எடைக்கு எடை சர்க்கரை கொடு
விசேஷங்களில் கலந்து கொள்ள பெரியார் கேட்கும் வெகுமதிகள்.

சாதியை வகுத்தது சமயம்
அதனை வாழ வைப்பதோ திராவிடர் கழகம்!

ராமனைக் கும்பிடுவது கம்யூனலிஸமாம்,
அல்லாவை இயேசுவைக் கும்பிடுவது செக்யூலரிசமாம்,
அப்போ
பணத்தையும், அரசியல்வாதியையும் கும்பிடுவது தான் திராவிடயிசமோ!

உருவ வழிபாடு மூடநம்பிக்கையின் உச்ச கட்டம்
பெரியார் உருவச் சிலை திறப்பு விழாவில்
திராவிடக் கழகம் தீர்மானம் !

ஈழப் பிணங்களின் மேலமர்ந்து
அமைச்சக பேரம்
திராவிட ஆட்சியாளர்கள் !

தைரியமா கோவிலுக்கு போய் சாமி கும்பிடுறவன் ஆத்திகன்.யாருக்கும் தெரியாம குல தெய்வ கோவிலுக்கு போய் சாமி கும்பிடுறவன் நாத்திகன்.

Thursday, July 9, 2009

இஸ்லாமிய சமய குருவும், நானும் !

எப்படா இஸ்லாமியப் பண்டிகைகள் வரும், எப்ப நம்ம சகோதரர்கள் வீட்டுக்கு போய் பிரியாணி சாப்பிட போறோம்னு இருக்கும். அவ்வளவு அருமையா இருக்கும். பிரியாணி மட்டுமல்ல, அவர்களின் நல்ல கவனிப்பு, அதை சாப்பிடு இதை சாப்பிடுன்னு ரொம்ப தட புடலான கவனிப்புகள் இருக்கும். ஒரே கூட்டமா கலக்லப்பா இருக்கும். பொதுவாக சமய பேதம் இல்லாம வெள்ளை மனசோட,நம்ம கிட்ட மனச விட்டு பேசுவாங்க.

ஆனால் ஒரு சமயம் அப்படி விருந்துக்கு போகும் போது நமக்கு கொஞ்சம் வேறு விதமான அனுபவம் ஏற்பட்டது. அப்பொழுது நான் 11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். என் தந்தைக்குக்கு நெருக்கமானவர் அந்த இஸ்லாமிய சகோதரர், எங்களை கண்டிப்பாக வீட்டுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். எந்த பண்டிகை என்று ஞாபகம் இல்லை.

நாங்களும் சென்றோம். வழக்கம் போல நல்ல கவனிப்பு. சகோதரரின் தந்தையார் ஒரு இஸ்லாமிய சமய குரு.வீட்டின் ஒரு புறத்தில் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். மறுபுறம்,சகோதரரின் தந்தையார் இஸ்லாத்தை பற்றியும், நபிகளைப் பற்றியும் அங்கு வந்திருந்தவர்களுக்கு சொல்லி கொண்டிருந்தார். நானும் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து, "என்னப்பா, இன்னும் சாப்பிடலையா...போய் சாப்பிட்டு வா....இந்த முறை பீப் பிரியாணி செஞ்சி இருக்கோம் போய் சாப்பிடு பா" என்று அன்பாக சொன்னார்.


உடனே நான் "அங்கிள், நான் பீப் சாப்பிட மாட்டேன்...வெள்ளை சாதம் சாப்பிட்டுக்குறேன்னு" சொன்னேன். அதற்கு அவர் ஒரு பெரிய விளக்கமே கொடுத்தார்.

" அதென்ன பா, பீப் சாப்பிட மாட்டேன்னு சொல்ற. உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்தும், இறைவன் மனிதனுக்காக படைத்தது தான். அதுமட்டுமல்ல நம்முடைய பற்களும் அதற்கேற்ற மாதிரி தான் கொடுத்து இருக்கிறார். ஆடு மாடுகளுக்கு INCISOR பற்கள் தான் இருக்கும் CANINE பற்கள் இருக்காது. ஆகையால், அவைகள் இலை, தழைகளை உணவாக உட்கொள்கிறது. சிங்கம் புலி, போன்றவைகளுக்கு CANINE பற்கள் இருக்கும், (ஆனால் இலை தழைகளை சாப்பிடத் தேவையான இன்னொரு வகைப் பற்கள் கிடையாது- MOLAR பற்கள் என நினைக்கிறேன் ) அவைகள் மாமிசம் போன்ற உணவுகளை கடித்து உண்பதற்கு தான். ஆனால் மனிதனுக்கு அனைத்து வகையான பற்களை இறைவன் கொடுத்ததற்கு காரணம், இவ்விரு வகை உணவுகளையும் சாப்பிடத் தான். அதனால், அதை சாப்பிட மாட்டேன், இதை சாப்பிட மாட்டேன், அமாவாசை, பௌர்ணமி,ஏகாதசில சாப்பிட மாட்டேன், அது இதுன்னு சொல்றது எல்லாம் சும்மா பொய். மூட நம்பிக்கை."
என கொஞ்சம் இந்து சமயத்தைப் பற்றி இழிவாக பேசினார். மற்ற சகோதரர்களும், அவர் சொல்வது சரி என்று சொன்னார்கள். அத்தனை பேர் எதிரில் அவர் அப்படி சொன்னது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

"சரி சரி..போய் சாப்பிடு பா" என்று சொன்னார் அவர்.

"நீங்க சொன்னது எல்லாம் சரிங்க அங்கிள், எல்லா வகையான பற்கள் உங்களுக்கு இருந்தும் பன்றியை நீங்கள் ஏன் சாப்பிடுவதில்லை? " என்று எதார்த்தமாக கேட்டேன். அவர்களுக்கு பதிலடி கொடுக்க கேட்கவில்லை.
அங்க இருந்த கூட்டமே அமைதி ஆயிடுச்சு. அங்கிள் கண்களில் கோவம் கொப்பளிக்கிறது. பதில் எதுவும் சொல்லவில்லை.

"ஏன் மா, தம்பிக்கு வெள்ளை சாதமும் ரசமும் போடு மா" என்று தன் மனைவிக்கு குரல் விட்டார் அங்கிள்.


அப்படி பேசியதற்கு, இப்பொழுது வருத்தப் படுகிறேன் என்றாலும், மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரிய வேண்டும். நாம் பேசுவது மற்றவரை எந்த அளவிற்கு பாதிக்கும் என்று யோசித்து பேச வேண்டும். எந்த சமயத்தினரின் உணர்வுகளையும் "Take if for Granted" ஆக எடுத்துக் கொள்ளாமல்,மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது!

Wednesday, July 8, 2009

அரைவேக்காட்டு நாத்திகன் - சின்ன கதை!

ஒருவர் வெகுநாட்களாக நோயால் அவதியுற்று வந்தார். ஒரு நாள், அவரைப் பார்க்க ஆன்மீகவாதி/சமய குரு ஒருவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் வாடி, சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். அனைவரும், இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் என கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டனர்.

பிறகு அந்த சமய குரு, "இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்" எனக் கூறினார்.
அந்த கூட்டத்திலும் ஒரு அரைவேக்காட்டு நாத்திகன் ஒருவன் இருந்தான். இதனைக் கேட்டதும் நக்கலாய் ஹி ஹி ஹி என சிரிக்கத் தொடங்கினான். "வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணம்ப்படுத்துமா ? வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா ?" என கூறி சிரித்தான்.

அதற்கு அந்த சமய குரு, "இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார்". நம்ம பெரியார் வழி வந்த நாத்திகனுக்கு தான் மூளையே இல்லைன்னாலும், கோவம் பொத்துகுட்டு வருமே..."நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையே உங்களை அடித்து விடுவேன், என அடிக்கப் பாய்ந்தான்"

பதற்றமே இல்லாத அந்த சமய குரு, "முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி?. இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் " என்றாராம். மூக்குடைந்த நாத்திகன் வெட்கித் தலை குணிந்தான்.

இந்தக் கதையின் கரு திரு. சுகி சிவம் அவர்களின் நூலான "இந்த நாள் இனிய நாள்" என்பதில் இருக்கிறது. கொஞ்சம் எக்ஸ்ட்ரா சேர்த்து சொல்லி இருக்கேன். அவ்ளோ தான்.

கோட் சூட் போட்டுட்டு, வெள்ளைத் தோளோடு, இசையினால் நோயை குணப்படுத்த முடியும் என்று நிரூபித்து இருக்கிறோம் என பெயர் தெரியாத யூனிவர்சிட்டி ரிசர்ச் செஞ்சி சொன்னாங்கன்னா..... நம்புவாங்க. ஒவ்வொரு சொல்லும், சப்தமும் பல மாற்றங்களை ஏற்படுத்த கூடிய சக்தி வாய்ந்தவை என நம்மவர்கள் சொன்னா சிரிப்பார்கள்.


இந்தியர்கள் எப்பொழுதும், எல்லா விஷயங்களிலும் கருப்பொருளில் ரொம்ப ஸ்ட்ராங்க்..ஆனா மார்க்கெட்டிங்க்ல ரொம்ப வீக். அதன் விளைவுகள் தான் இந்த மாதிரி போலி நாத்திக கும்பல் தோன்றக் காரணம். மக்களின் படிப்பறிவு உயர உயர, இந்த கும்பலின் எண்ணிக்கை குறையத் தொடங்கி இருப்பது ஆரோக்யமான விஷயம் தான்.

இருபது வயசுல நாத்திகம் பேசுபவனும், முப்பது வயசுல கம்யூனிசம் பேசுபவனும், ஐம்பது வயசுல ஈசனைத் தேடுபவனும் தான் திராவிடத் தமிழனா ?


இது ஓரளவுக்கு ஒப்புக் கொள்கிற மாதிரி தெரிஞ்சா...இந்த லிங்க்ல போய் பாருங்க....அதுல திராவிடன் யார்னு சொல்லுங்க..

http://poimugam.blogspot.com/2009/06/blog-post_25.html

Monday, June 29, 2009

தாஜ்மகால் - காதலின் சின்னமா?


உலகில் ஏழு அதிசயங்களில் ஒன்று, மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட நினைவகம்,முதல் முறை பார்க்கும் போது நம் கண்கள் அதன் அழகினில் மூழ்கி வேறு திசைக்கு திரும்ப மறுக்கும் அளவிற்கு ரம்யமாக காட்சி அளிக்கும். இவை அனைத்தும் மறுக்க முடியாத ஒன்று. அப்படி ஒரு அற்புதம் தாஜ்மஹால்.


ஆனால் இது ஒரு காதலின் சின்னமா? யார் இப்படி ஆரம்பித்தது? நிச்சயமாக ஏதாவது ஒரு சினிமாக்காரராகத் தான் இருக்க வேண்டும். பழங்காலக் கவிகள் பலர் காதலை பற்றி கதைகள், கட்டுரைகள், கவிதைகள் பாடி இருந்தாலும், காதலை தாஜ்மஹாலுடன் ஒப்பிட்டு கவி பாடியதில்லை. அப்படி என்றால் இதை சினிமாக்காரர்கள் தான் துவக்கி இருக்க வேண்டும்.



ஷாஜகான் மும்தாஜ் மீது வைத்துள்ள காதலுக்காக கட்டியது தானே தாஜ்மகால். அது காதலின் சின்னம் தானே என்று நமக்கு தோன்றுவது இயல்பு. நாம் தாஜ்மகாலை சரியாகத் தான் உவமேயப் படுத்துகிறோமா என தெரிந்து கொள்ள, அப்படி என்ன தான் செய்தார் ஷாஜகான் என அறிந்து கொள்வது முக்கியம்.


முகலாய மன்னர் ஜஹாங்கீருக்கும், அவரது இரண்டாவது மனைவி ராஜ்புட் இளவரசி ஜகத் கோசைன் என்பவருக்கும் பிறந்தவர் தான் ஷாஜகான்(1628-1658). தாய் இந்துவாக இருந்தாலும்,இஸ்லாமின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். மற்ற சமயத்தினர் மீது இரக்கம் காட்டாத மிருகம் போல தான் வாழ்ந்தார் ஷாஜகான்.


1. இஸ்லாத்தின் கொள்கைகளை, கிறித்துவம் திருடுவதாக கூறி, தன் ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான கிறித்துவர்களை கொன்று குவித்தவர் இந்த ஷாஜகான்.


2. ஷாஜகானிற்கு வரலாற்றின் படி மொத்தம் 3 மனைவிகள் பெயர் தெரியும், ஆனால் பல மனைவியர் உண்டு என்று சொல்கிறார்கள். முதலாவது மனைவி தான் மும்தாஜ். அப்படியாப்பட்ட காதல்
இருந்தால் இரண்டாவது, மூன்றாவது மனைவியரை ஏன் மணந்தார் என்று தெரியவில்லை.


3.பல மனைவியர் மட்டும் இல்லாமல், தன்னை மகிழ்விக்க பெரும் மங்கையர் கூட்டத்தையே வைத்திருந்தார் ஷாஜகான். ஷாஜகானின் மகனான அவுரங்கஜீப் அவரை சிறை பிடித்த போது கூட, அந்த மங்கையர் கூட்டம் வேண்டும் என அட்ம் பிடித்து கூடவே வைத்து இருந்தாராம் ஷாஜகான். அப்படி ஒரு காமத்தின் அடிமை ஷாஜகான்.


4.தங்கள் பதினெட்டு வருட திருமண வாழ்க்கையில், மும்தாஜ் 14 பிள்ளைகளைப் பெற்றார். 14 வது பிள்ளையை ஈன்றெடுக்கும் போது தான் அவர் இறந்தார். அதன் பிறது 22000 ஊழியர்களை வைத்து, 22 ஆண்டுகளாக கட்டப்பட்ட கட்டிடம் தான் தாஜ் மகால்.


5. தாஜ்மகாலை கட்டி முடித்தவுடன், அதன் கட்டிட வடிவமைப்பாளரின் விழியைப் பிடுங்கி, தலையை வெட்டி(beheading) கொலை செய்தாராம் ஷாஜகான். அது மட்டுமல்ல, தாஜ்மகாலை உருவாக்க காரணமாக இருந்த 22000 தொழிலாளர்களின் இரு கை விரல்களையும் வெட்டினாராம் ஷாஜகான். யாரும் இது போல கட்டிடத்தை இனிமேல் கட்டக் கூடாது என்பது அவர் சொன்ன காரணம்.

ஒரே ஒரு பொண்ணுக்காக, இத்தனை பேரை கொடுமைப்படுத்தி, சாவடித்து, கட்டிய கல்லரை ஒரு காதலின் சின்னமா?
வரலாற்றை படித்த பின், தாஜ்மகாலைப் பார்த்தால் ஷாஜகானின் கொடுமைகளும், அவன் காம குணங்களும் தான் நினைவுக்கு வருகிறது.


காதல், இதில் தெரிகிறதா இல்லையா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் !

Thursday, June 25, 2009

அறியாமை என்னும் பகுத்தறிவு!

நாடே இந்திய சுதந்திரத்துக்கு போராட்டம் நடத்திய போது , அதில் கலந்துகொள்ளாமல், ஜாதியை வைத்து உள்ளூர் அரசியல் நடத்தியது யார் ?

அ) தந்தைப் பெரியார்
ஆ)ராஜாஜி
இ) காந்தியடிகள்

பயங்கரமான இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி சிறை கண்டு, போராளி போல காட்டிக் கொண்டு, தன் சொந்தக்காரருக்கு இந்தி தெரியும் என்பதால் தான் மத்திய மந்திரி பதவி தந்தேன் என்று சொன்ன பகுத்தறிவு சிங்கம் யார்?


அ) கருணாநிதி
ஆ) தந்தை பெரியார்
இ)கி.வீரமணி

எந்த நாட்டின் சுதந்திர நாளை துக்க தினமாக அனுசரித்தவர் தந்தை பெரியார்?
அ) அமெரிக்கா
ஆ) இந்தியா
இ) ரஷ்யா


கீழ்கண்டவற்றில் திராவிடன் அல்லாதவனை தூக்கி எறி
அ) ஜோஸ்ப் கிறிஸ்டோபர்
ஆ) ஹஃபீஸ் சயீத்
இ) சிவகுமார்.

பகுத்து ஆராய்வது பகுத்தறிவு என்பது போய், பார்ப்பன எதிர்ப்பு தான் பகுத்தறிவு என்ற மிகப் பெரிய பகுத்தறிவு தத்துவத்தை பின்பற்றும் இயக்கம் எது?


அ) திராவிட கழகம்
ஆ)பாரதிய ஜனதா கட்சி
இ)தேசிய முற்போக்கு திராவிட கழகம்

இதற்கு பதில் அனைவருக்கும் தெரிந்ததே...கொஞ்சம் யோசிச்சு பாருங்க பகுத்தறிவு இயக்கங்களின் அறியாமையைப் பற்றியும் நமக்கு தெரிந்துவிடும்.

எப்படி மூட நம்பிக்கையை திராவிட இயக்கங்கள் சமூகத்தில் இருந்து நீக்க வேண்டி பாடுபடுகிறார்களோ அதே போல பகுத்தறிவு அறியாமையை நீக்க வேண்டிய கட்டாயமும் திராவிடர்களாகிய நமக்கு உண்டு (எடுத்துக் காட்டு உவமை அணி)

பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் ,தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்,திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர்
திருமந்திரம் பாடிய திருமூலர் இவர்களின் அழகு தமிழை புரிந்த கொள்ளவே முடியாத பகுத்தறிவு இயக்கங்கள், திராவிடனுக்கு புது அர்த்தங்கள் கண்டுபிடிக்கின்றன. இதோ சேக்கிழார், அப்பர், கம்பர், ஔவையார் இவங்க எல்லாம் திராவிடன் இல்லையா ?

இதே தீண்டாமை ஒழிப்பு, பெண்ணுரிமை, சுயமரியாதை என பார்ப்பனரான பாரதியாரும் தான் போராடினார். பாரதியார் திராவிட்னா இல்லையா?


சரி, உங்க பாஷையில கன்னடம், தெலுங்கு,மலையாளம் பேசுறவங்க திராவிடனா இல்லையா?


வட இந்தியாவுல இருக்கவங்க எல்லாருமே ஆர்யர்கள் என்றால், அங்கு வாழும் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் எல்லாம் யார்? மாயாவதி யாருக்காக கட்சி நடத்துறாங்க?

திராவிடனும் ஆர்யனும் தான் எதிரி, சண்டை என்றால், மராட்டியருக்கும் பீகாரிக்கும் எதுக்கும் சண்டை? இருவரும் ஆர்யர்கள் தானே?

திராவிடனுக்கு, உங்க பெரியார் ட்ரஸ்ட் கல்லூரிகளில் டொனேஷன் வாங்கறதில்லையா?

ஜாதி வேற்றுமை பார்க்கக் கூடாது, சமூக நீதி காப்பாற்றுவது, சுயமரியாதை இவை எல்லா மககளுக்கும் உண்டு. இதில் வேறுபாடு இல்லை.

ஆனால், இந்து சமயத்தை இழிவாக பேசி, விதண்டாவாத்ம் பேசி பெருமை தேட முயற்சிக்க வேண்டாம்.


அப்படியாப்பட்ட பெரியாரே, சைவ சித்தாந்த துறவியான மறைமலை அடிகளாரை தன் இடத்திற்கு வரவழைத்து விருந்தளித்தார். அந்த சமயத்தில், யாரும் அவர் புன்படும் படி பேச கூடாது, இவ்விடத்தில் புலால் சமைக்க கூடாது என்று கன்னியத்தோடு, பிறர் நம்பிக்கைகள் புன்படாதவாறு, நடந்து கொண்டவர் பெரியார்.

"ஞாயிற்றைக் கை மறைப்பார் இல்"- அறிவை சுட்டிக்காட்டி வள்ளுவன் சொல்லியதை, இந்து சமயத்தை ஒப்பிடுகிறோம் இங்கே!

உங்களைப் போல் 10000 இயக்கங்கள் வந்தாலும் இந்து சமயத்தின் நம்பிக்கைகளையும், கலாச்சாரங்களையும் பழக்கவழக்கங்களையும் அழிக்க முடியாது.

பகுத்தறிவு ஞானிகள் என்று சொல்லி கொள்பவர்கள் இவற்றை எல்லாம் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கள்.

ஈரோடு வெங்கட ராமசாமி நாயக்கர் மட்டும் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்தால், "அடடா...நம்ம வளத்த சொத்தை இப்படி அழிக்கிறாங்களே....சாமி இல்லைன்னு சொல்றதுக்கு சம்பளம் கொடுத்து ஆள் வச்சி இருக்காங்களே... " வருத்தப் பட்டிருப்பார்.

ஊர்ல பருவ மழை வரலை, விவசாயிகளோட நலனை பாதுகாத்திடுங்கள். எத்தனையோ பேர் பசியும் பட்டினியுமா இருக்காங்க...அவங்களுக்கு ஏதாச்சும் செய்யுங்க...ஈழத்து அவலங்களுக்கு எதாவது வழி சொல்லுங்க...பகுத்தறிவு சிங்கங்கள் தானே ஆட்சில இருக்கு.....எதாச்சும் செய்யலாமே...ஆட்சியும் அதிகாரமும் கையில் இருக்கும்போது, போராட்ட வேஷங்கள் எதற்கு?

பைசா வந்தா திராவிட இயக்கங்கள் பகுத்தறிவு பஞ்சா பறந்து போகுமோ?